சிறு அறை - பெருமாள் முருகன்



காணொளி ▶ சிறு அறை | பெருமாள் முருகன்

சிறு அறைக்குள்
அடைபட்டுக் கிடக்கும் அவனுக்கு
அது
சிறு அறையென்பது தெரியாது

அங்கும்
ஒளியுண்டு இருளுண்டு
வெளியுண்டு வானுண்டு

அது
சிறு அறையென
அவனுக்குத் தெரியாமலிருப்பது
எவ்வளவு பெரிய பாக்கியம்.

- பெருமாள் முருகன்

குரல்: சௌம்யா ராமன்

Comments

Popular Posts