ஒரே முறை தான் - முகுந்த் நாகராஜன்



காணொளி ▶ ஒரே முறை தான் - முகுந்த் நாகராஜன்

கலவரம்.
பழக்கப்பட்ட ஊரின்
முகம் மாறிப் போயிற்று.
தினம் போகும், வரும் சாலையில்
டயர்களை எரித்துக் கொண்டிருந்தார்கள்
கோஷம் போட்டபடி.
தற்காலிக உற்சாகத்தில்,
பாதையின் குறுக்கே விழ
மரத்தை அறுத்தது ஒரு கும்பல்.
அப்போதுதான்
முதல் தடவையாய்
அந்த மரத்தை
அங்கு பார்த்தேன்.

- முகுந்த் நாகராஜன்

குரல்: கெளதம்

Comments

Popular Posts